துறையூர் வட்டம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு துறையூர் வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்(துறையூர்), ஆறுமுகம்(உப்பிலியபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், 213 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 164 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது. 19 மனுக்கள் உரிய விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
முகாமில், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவசங்கரன், வட்ட வழங்கல் அலுவலர் லஜபதிராஜூ, வருவாய் ஆய்வர் கௌரி, கிராம நிர்வாக அலுவலர் சஞ்சீவி உள்ளிட்ட வருவாய் துறையினர் பங்கேற்றனர்.