துறையூர் நகர பொதுமக்களிடம் போலீஸார் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
துறையூர் நகரம் மற்றும் சுற்றுப் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புடனும்,
விழிப்புணர்வோடும் இருக்க வேண்டி காவல் துறை சார்பில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) கோ. லதா, உதவி ஆய்வாளர் எஸ். செல்வராசு மற்றும் காவலர்கள் மேட்டுத்தெரு, பெருமாள் கோயில் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.