அரசியலுக்கு வர வேண்டும்: கமலுக்கு இ-போஸ்ட் அனுப்பிய திருச்சி ரசிகர்கள்

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறி, அவரது முகவரிக்கு திருச்சியைச் சேர்ந்த ரசிகர்கள் 60 பேர் வியாழக்கிழமை  இணையவழி அஞ்சல் (இ-போஸ்ட்) அனுப்பினர்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறி, அவரது முகவரிக்கு திருச்சியைச் சேர்ந்த ரசிகர்கள் 60 பேர் வியாழக்கிழமை  இணையவழி அஞ்சல் (இ-போஸ்ட்) அனுப்பினர்.
நடிகர் கமல்ஹாசன் குறித்து தமிழக அமைச்சர்கள் பல்வேறு விமர்சனங்களை எடுத்துரைக்கும் வகையில்,  தனது நற்பணி மன்றங்களைச் சேர்ந்தவர்கள்  ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு விவரங்களை அனுப்ப வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந் நிலையில், திருச்சி மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற முன்னாள் செயலாளர் என். சாரதி, துணைச் செயலாளர் பி.கே.சீனிவாசன், பொருளாளர் எம். குணசேகரன், முன்னாள் மாநிலப் பொறுப்பாளர் உறந்தை மு.பிச்சையா உள்ளிட்ட 60 பேர் வியாழக்கிழமை தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து இ-போஸ்ட் மூலம் கமல்ஹாசனுக்கு அரசியலுக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்து அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com