திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சமூகவியல் படிப்பில் சேர ஜூலை 31வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் (எம்.ஏ.) பாடப்பிரிவில் சேர இளங்கலை பட்டம் ஏதேனும் ஒன்றை பெற்றிருந்தால் போதுமானது. போட்டித்தேர்வுகளில் குறிப்பாக இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் இதன் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பில் மாணவர்கள் அதிகளவில் சேரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இதில் சேருவதற்கான அவகாசம் ஜூலை 31-வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பல்கலைக்கழக பதிவாளர் இரா. பாபு ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.