இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவர் சாவு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காடுவெட்டி சேர்ந்த சின்னசாமி மகன் கனேசன் (65).   இவர் சொந்த வேலை காரணமாக   தொட்டியத்துக்கு தனது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காடுவெட்டி சேர்ந்த சின்னசாமி மகன் கனேசன் (65).   இவர் சொந்த வேலை காரணமாக   தொட்டியத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு எம்.புத்தூர்  அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது,  இவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த தொட்டியம் அக்ராஹரம் பகுதியை சேர்ந்த அய்யாத்துரை மகன் வீரமுத்து (35) என்பவரின் இருசக்கர வாகனம்  மோதியது.
இதில்,  கணேசன்,  வீரமுத்து  இருவரும் காயமடைந்தனர்.   இருவரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில் மேல்சிகிச்சைக்காக  திருச்சியில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட கணேசன் சிகிச்சை பலனின்றி    இறந்தார். காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com