ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு

திருச்சியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

திருச்சியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
  திருச்சி உத்தமர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (70). அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை இரவு பணி முடிந்து, இரவு உணவையும் கடையில் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அவ்வழியே சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com