திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் எம்.ஏ., மனிதவள மேலாண்மை படிப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., மனிதவள மேலாண்மை படிப்புக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., மனிதவள மேலாண்மை படிப்புக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அரசு தொழிலக நிறுவனங்கள், சுகாதார இயக்ககம் மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தொழிலாளர் நல அலுவலர், மேலாளர், தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியுள்ளதாக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பான எம்.ஏ., மனிதவள மேலாண்மை படிப்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இளநிலை பட்டம் பெற்றவர்கள் இந்த படிப்பை தொடரமுடியும். இதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளோர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் பொதுப்பிரிவு ரூ. 300, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர் ரூ. 150-க்கு பெறப்பட்ட காசோலையை கல்லூரியில் அளித்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது பல்கலைக்கழக இணையதளமான ‌w‌w.b‌d‌u.ac.‌i‌n என்ற முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டவையாக இருந்தால், அதனுடன் ரூ. 300 அல்லது 150-க்கு பெறப்பட்ட காசோலையை இணைத்து, துறைத் தலைவர், வாழ்நாள்வரை கற்றல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம், திருச்சி 620023 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் வேண்டுவோர், துறைத் தலைவரை 94432-18015 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com