திருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஐடிஐ பிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள், இலகு ரக ஓட்டுநர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான அனுமதியும் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் முகாம் நடைபெறும்.
தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவெண் ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், வேலையளிப்போர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அனுகலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com