திருச்சியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த சிவகங்கையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், உசிலங்குளம் அருகே உள்ள கீழதண்டலை பகுதியைச் சேர்ந்தவர் கா. ராஜ்குமார் (32). தனியார் நிறுவன கார் ஓட்டுநர். இவர், தனது நிறுவன உரிமையாளருடன் வெளியூர் சென்றுவிட்டு ஜூன் 5-ஆம் தேதி காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் வந்தபோது காரை ஓரமாக நிறுத்திவிட்டு ராஜ்குமார் கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது, சரக்கு ஆட்டோ மோதியதில், பலத்த காயமடைந்த ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.