துறையூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதல்: ஒருவர் சாவு

துறையூர் அருகே வேன் மற்றும் இரு சக்கர வாகனம் மோதி நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

துறையூர் அருகே வேன் மற்றும் இரு சக்கர வாகனம் மோதி நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சிக்கத்தம்பூர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர்கள் ப. ராஜூ(40), பெ. ரவி(42). இவர்கள் இருவரும் மதுஅருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றனர். ஒக்கரை கிருஷ்ணாபுரம் பிரிவு சாலை அருகே சென்றபோது துறையூரிலிருந்து உப்பிலியபுரம் நோக்கி சென்ற வேனில் மோதினர். இதில்,ராஜூ சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த ரவி, வேன் ஓட்டுநர் செந்தாரப்பட்டி விஜயகுமார், வேனிலிருந்த முருங்கப்பட்டி லோகேஸ்வரி(30) ஆகிய மூவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பிறகு ரவியும், லோகேஸ்வரியும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com