சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ மகன் சாவு

துறையூர் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்தார்.

துறையூர் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்தார்.
பச்சமலை கானாப்பாடியைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் ரவி(42). இவர் துறையூர் தீயணைப்பு நிலைய வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
 இவருடைய தந்தை மூக்கன் உப்பிலியபுரம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ.
இந்நிலையில் ரவி இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை பச்சமலை சென்று விட்டு திரும்பும் போது மலைச் சாலையில் ஒரு திருப்பத்தில் கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com