மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்தது. அதில் வந்த, பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்பவர் தனது பேன்ட் டிக்கெட் பாக்கெட்டுக்குள் தலா 50 கிராம் எடையுள்ள 2 தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 2.90 லட்சமாகும்.