மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்தது. அதில் வந்த, பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்தது. அதில் வந்த, பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்பவர் தனது பேன்ட் டிக்கெட் பாக்கெட்டுக்குள் தலா 50 கிராம் எடையுள்ள 2 தங்கக் கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 2.90 லட்சமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com