திருச்சி
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ. 10,085 அபராதம்
திருச்சி ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடமிருந்து ரூ. 10.085 அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடமிருந்து ரூ. 10.085 அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பி. உதயகுமார்ரெட்டி, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் அருள்ஜோசப் மேற்பார்வையில் பறக்கும் படையினர், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், டிக்கெட் பரிசோதகர்கள் 28 பேர், ரயில்வே பாதுகாப்பு படையினர் 24 பேர் ஈடுபட்டனர். தஞ்சையைக் கடந்து சென்ற விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயிலில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 34 பேர் டிக்கெட் இன்றி பயணித்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. 10, 085 வசூலிக்கப்பட்டது.