வழிதவறிய சிறுவன் ரயிலிலிருந்து குதித்து காயம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறினான். பின்னர் நாமக்கல் வந்து ரயில் ஏறி கரூர் செல்ல திட்டமிட்ட

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு புதன்கிழமை வீட்டை விட்டு வெளியேறினான். பின்னர் நாமக்கல் வந்து ரயில் ஏறி கரூர் செல்ல திட்டமிட்ட சிறுவன் அவ்வழியே வந்த ரயில் ஏறி அமர்ந்தான். ரயில் நீண்ட நேரமாக பயணித்து திருச்சியை நெருங்கியது. சிறுவன் அக்கம் பக்கத்தினரிடம் கரூர் வந்துவிட்டதா என விசாரித்தபோது, ரயில் திருச்சி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சக பயணிகள் தன்னை யாரிடமாவது பிடித்து ஒப்படைக்கப் போகிறார்கள் என பயந்த சிறுவன் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் நுழைந்ததும் தப்பியோடுவதற்காக ரயிலிலிருந்து குதித்துள்ளான். இதில், நடைமேடையில் விழுந்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை போலீஸார் மீட்டு, சிகிச்சைக்குப் பின்னர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com