பழங்குடியினர் நலத் திட்ட அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய அழைப்பு

திருச்சி மாவட்டம், துறையூரில் பழங்குடியினர் நலத் திட்ட அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருச்சி மாவட்டம், துறையூரில் பழங்குடியினர் நலத் திட்ட அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சிமாவட்டம், துறையூரில் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் திட்ட அலுவலர் (பழங்குடியினர்) நல அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய ஒரு தட்டசர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு ரூ.15,000, அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.8000, துப்புரவுத் தொழிலாளர் பணிக்கு ரூ.6,000, ஓட்டுநர் பணிக்கு ரூ.12,000 என்ற அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தட்டச்சர், கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியும், தட்டச்சில் தமிழ், ஆங்கிலத்தில் முதுநிலைத் தேர்ச்சியும், கணினியில் தட்டச்சு செய்ய அறிந்திருத்தல் வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு எஸ்எஸ்எல்சி தோல்வி, எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியிடத்துக்கு 8 ஆம் வகுப்பு தோல்வி, இலரகுக வாகனஉரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை முழு வெள்ளைத்தாளில் விவரம் தெரிவித்து, சான்றிதழ் நகல்களுடன் ஜூலை 5 ஆம் தேதிக்குள் திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், ஆதிதிராவிடர் நலத் தனி வட்டாட்சியர் அலுவலகம், துறையூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com