விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து  15 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து  15 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முசிறி அடுத்த உமையாள்புரத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (70).  இவர் தனது குடும்பத்துடன் பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு  வீட்டுக்கு திங்கள்கிழமை  வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் வெளிகேட் பூட்டு உடைக்கப்பட்டு, இதனை தொடர்ந்து கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த நான்கு பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை  மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக  முசிறி  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com