மாவட்டத்தில் அம்மா திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் 11 வட்டங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் 11 வட்டங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில் அலுவலர்கள் முகாமிட்டு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு,இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அந்தந்த ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரத்துக்கானமுகாம் நடைபெறும் வட்டம், அதற்குரிய கிராமங்கள் என்ற அடிப்படையில் விவரம்: திருச்சி கிழக்கு-ஆலத்தூர், திருச்சி மேற்கு- பஞ்சப்பூர், திருவெறும்பூர்- பத்தாளப்பேட்டை, ஸ்ரீரங்கம்- கிளிக்கூடு, மணப்பாறை- கண்ணுடையான்பட்டி, மருங்காபுரி- நல்லூர், லால்குடி- புள்ளம்பாடி வடக்கு, மண்ணச்சநல்லூர்- திருப்பைஞ்ஞீலி தெற்கு, முசிறி- ஜயங்கொண்டான், துறையூர்- பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு, தொட்டியம்- தொட்டியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com