திருச்சி மாவட்டம், முசிறி அருகே சேருகுடி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 2 பேரை அரிவாளால் வெட்டியவர்கள் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.முசிறி அருகேயுள்ள சூரம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மதிவாணன் (36). இவர் தனது நண்பரான சேருகுடியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராமுவுடன் (30) தனது வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சேருகுடியைச் சேர்ந்த அரவிந்தன், பரமசிவம், கோபால் ஆகிய 3 பேரும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக மதிவாணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, மதிவாணன், ராமு ஆகியோரை அரவிந்தன், பரமசிவம் ஆகியோர் அரிவாளால் வெட்டியுள்ளனர், கோபால் கையிலிருந்த ஹாக்கி மட்டையால் தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த மதிவாணன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், ராமு திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.புகாரின்பேரில், முசிறி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.