ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான காட்டழகிய சிங்கப் பெருமாள் லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.
காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது. இதில் பூ வடிவிலும், சங்கு சக்கர வடிவிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு இருந்தன. முன்னதாக காலையில் காட்டழகிய சிங்க பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சி, நாகஸ்வர நிகழ்ச்சி மாலையில் உபநியாசமும் நடைபெற்றது.