திருச்சி அருகே கொலையான பெண் குறித்து போலீஸார் விசாரணை

திருச்சி அருகே சனிக்கிழமை கொலையான பெண், கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி அருகே சனிக்கிழமை கொலையான பெண், கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர், ஆவாரங்காடு, ரகமத் நகரைச் சேர்ந்தவர் முகமதுஅபி சுல்தான். இவருக்குச் சொந்தமான பாழடைந்த வீட்டில் சனிக்கிழமை காலை, அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண், கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து குளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,  இவர் அதேபகுதியில் சீட்டு நடத்தி வந்தவர் எனவும் தெரியவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com