உலக மனநல தினத்தையொட்டி திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற மனிதச்சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஆத்மா மருத்துவமனைகள் மற்றும் இளையோர் எக்ஸ்னோரா இண்டர்நேஷல் ஆகியவை இணைந்து நடத்திய இந்த மனிதச்சங்கிலி பாரதியார் சாலையில் தொடங்கியது. நிகழ்வுக்கு ஆத்மா மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் கே. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இளையோர் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் நிறுவனர் பி. மோகன், மாவட்ட நூலக அலுவலர் அ. பொ.சிவகுமார், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் மனிதச்சங்கிலியைத் தொடக்கி வைத்தனர். பாரதியார் சாலை, எல்ஐசி, ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, ஜென்னி பிளாசா, தலைமை அஞ்சல் நிலையம் வரையிலான பகுதி வரை மாணவ, மாணவிகள் மனிதச்சங்கிலியில் நீண்டவரிசையில் கைகோர்த்து நின்றனர்.