இளைஞரிடம் 7 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே இளைஞரிடம் 7 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே இளைஞரிடம் 7 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே காட்டூர் கணேஷ் நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மோகன் (27) . இவர் மலேசியாவிலிருந்து கடந்த 4 நாள்களுக்கு முன்பு தான் சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில்,  திங்கள்கிழமை காலை கைலாஷ் நகர் மேல்நிலை தண்ணீர்தொட்டி அருகே மோகன் சென்று கொண்டிருந்தாராம்.  அப்போது எதிரே வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, மோகனை வழிமறித்து தாக்கியதுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு, தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில்,  திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com