சமயபுரத்தில் குவியும் பக்தர்கள்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை  காலை 10.31-க்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்க திங்கள்கிழமை மாலை 5 மணியிலிருந்தே பக்தர்கள் பாத யாத்திரையாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சமயபுரம் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.   வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், பானகம், வெள்ளரிப் பிஞ்சு, பழங்கள் உள்ளிட்டவற்றை தனி நபர்களும்,  பல்வேறு அமைப்பினரும் வழங்கினர்.  நள்ளிரவில் சமயபுரத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.   தொடர்ந்து பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com