கட்டுரை, கவிதைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின்  மாநகரச் செயலர் வி. ரங்கராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி  சாதியற்ற தமிழர்கள் என்ற தலைப்பில் 6 பக்கத்துக்குள் கட்டுரைப் போட்டியும், காவியற்ற தமிழகம் என்ற தலைப்பில்  45 வரிக்குள் கவிதைப் போட்டியும் இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது.
இப்போட்டிக்கான கட்டுரை, கவிதைகளை  ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கவிஞர் இளங்குமரன், எண் 7/9  மளிகைத் தெரு, திருச்சி- 2 என்ற முகவரிக்கு (    98424 96666, 90951 46767)   அஞ்சல் மூலமாக  அனுப்பி வைக்க வேண்டும்.  கலந்து கொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  வெற்றி பெறுவோருக்கு மே 6 ஆம் தேதி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் பரிசு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com