தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநகரச் செயலர் வி. ரங்கராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சாதியற்ற தமிழர்கள் என்ற தலைப்பில் 6 பக்கத்துக்குள் கட்டுரைப் போட்டியும், காவியற்ற தமிழகம் என்ற தலைப்பில் 45 வரிக்குள் கவிதைப் போட்டியும் இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது.
இப்போட்டிக்கான கட்டுரை, கவிதைகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கவிஞர் இளங்குமரன், எண் 7/9 மளிகைத் தெரு, திருச்சி- 2 என்ற முகவரிக்கு ( 98424 96666, 90951 46767) அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். கலந்து கொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறுவோருக்கு மே 6 ஆம் தேதி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் பரிசு வழங்கப்படும்.