முசிறியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் புதன்கிழமை திறக்கப்பட்டது.
முசிறி கைகாட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முசிறி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.செல்வராசு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரி பழங்கள் வழங்கினார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், நெடுமாறன், ஒன்றியச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், பால்மணி, ஜெயம், நகரச் செயலாளர் சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.