திருச்சி
ஸ்ரீரங்கத்தில் நாளை சிறப்பு பூஜைகள்
திருச்சி கொள்ளிடக் கரையிலுள்ள சஞ்சீவிஆஞ்சநேயர் கோயிலில் மாதந்தோறும் மூலநட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்
திருச்சி கொள்ளிடக் கரையிலுள்ள சஞ்சீவிஆஞ்சநேயர் கோயிலில் மாதந்தோறும் மூலநட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். தற்போது கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் செல்வதால், கோயிலுக்குள் தண்ணீர் புகுந்து பூஜைகள் நடத்த இயலாத நிலை உள்ளது.
எனவே ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதியில் ஐசிஐசிஐ வங்கி எதிரிலுள்ள வாசுதேவ சுவாமிகள் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை ( ஆக.21) சிறப்பு பூஜைகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.