திருவானைக்கா கோயில் குடமுழுக்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு நேரடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் குடமுழுக்கு முதல் கட்டமாக 9 ஆம் தேதியும், 2 -ஆம் கட்டமாக 12 ம் தேதியும் நடைபெறுகிறது. இவற்றில் 12-ஆம் தேதி என்பது நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் என்பதால் அவரை நேரடியாக அழைக்க முடிவு செய்தனர். இதையடுத்து திருவானைக்கா கோயில் அர்ச்சகர்கள் பி. கார்த்திகேயன், சபரிநாதன், மணிகண்டன் ஆகியோர் சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சென்று குடமுழுக்கு அழைப்பிதழ் கொடுத்து குடமுழுக்கில் பங்கேற்குமாறு கேட்டு கொண்டனர்.
பின்னர் கோயிலின் சிறப்புகள் குறித்து அர்ச்சகர் பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் விளக்கினர். இதையடுத்து ரஜினிகாந்த் மண்டலாபிஷேகம் நிறைவு பெறுவதற்குள் திருவானைக்கா கோயிலுக்கு கண்டிப்பாக வருவதாக உறுதியளித்தாராம்.