முசிறி அருகிலுள்ள பேரூர் சின்னையன் மகன் அங்கமுத்து (48). மாற்றுத் திறனாளியான இவர் பூ கட்டும் வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை பொன்னாங்கன்னிப்பட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
தண்டலை அருகிலுள்ள அய்யனார் கோயில் திருப்பத்தில் வந்த கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கமுத்து திங்கள்கிழமை உயிரிழந்தார். முசிறி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.