குப்பை கிடங்கில் தீயை அணைக்க போராடும் வீரர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியின் குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் 4 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீரர்கள் ஈடுபட்டனர்.  

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியின் குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் 4 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீரர்கள் ஈடுபட்டனர்.  
சுமார் ஒன்னே முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த குப்பைக் கிடங்கிற்கு உரிய 1.3 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவை மீறி, இரண்டு மடங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகளில் அதிக  அழுத்தம் ஏற்பட்டு மீத்தேன் வாயு அதிகளவில் உற்பத்தி ஆவது, குப்பைகளின் அடர்த்தி ஆகியவற்றால்  தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் கடந்த 4  நாட்களாக இரவு பகலாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயவில்லை. பொக்லைன் இயந்திரம் கொண்டு குப்பைகளை அகலப்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com