திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தண்டாங்கோரை மற்றும் அப்பாத்துரை கிராமங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தினசரி இரவு நேரங்களில் தொடர் மணல் திருட்டு நடப்பதைத் தடுக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் திருமணமேடு, அப்பாத்துறை, தண்டாங்கோரை, தாளக்குடி, கூகூர், அன்பில், நத்தம், மாங்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இதனை தடுக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் அரசை வலியுறுத்துகின்றனர். மணல் கொள்ளையைத் தடுக்க, வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் இரவுநேரங்களில் ஆற்றங்கரையிலேயே உறங்குவதாகக் கூறப்படுகிறது.