திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்த க. குப்பண்ணகவுண்டர் மனைவி வேலாத்தாள் (85) புதன்கிழமை ( பிப்.14) காலமானார்.
இவருக்கு பழநி வட்டாட்சியர் கு. ராசேந்திரன், திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, ஈரோடு கூட்டுறவுத் தணிக்கை அலுவலர் கு. ராசமனோகரன் ஆகிய மகன்களும், கு. செல்லக்கிளி என்ற மகளும் உள்ளனர்.
இறந்தவருக்கு பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் புதன்கிழமை மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.