திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.75 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சோதனையில் மலேசியாவில் இருந்து வந்த பெண் பயணியிடம் ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சோதனையில் மலேசியாவில் இருந்து வந்த பெண் பயணியிடம் ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டபோது, சாந்தி என்ற பெண் பயணி கொண்டு வந்த உடமைகளில் முறையாக சுங்கம் செலுத்தாத தங்கச் சங்கிலி, வளையல்கள் என ரூ.8.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.