திருச்சி அகஸ்தியர் பதிப்பகம் மற்றும் புத்தக நிறுவனத்தின் உரிமையாளர் அகஸ்தியர் எஸ். கோபாலகிருஷ்ணன் (68) உடல்நலக் குறைவால் ஸ்ரீரங்கத்தில் வியாழக்கிழமை (பிப்.15) காலமானார்.
இவருக்கு மனைவி சுதா, மகன் கிரீஷ், மகள் சோபிதா உள்ளனர். மறைந்த கோபாலகிருஷ்ணன் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீரங்கம் சந்திரா நகரிலுள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது.
தொடர்புக்கு : 94437 32153.