காவிரி பாலத்தில் மீண்டும்  புனரமைப்புப் பணிகள்

திருச்சி காவிரி பாலத்தில் ஏற்கெனவே ரூ.1.75 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதில், தடுப்புச் சுவர், நடைபாதை டைல்ஸ் பதிக்கும் பணி

திருச்சி காவிரி பாலத்தில் ஏற்கெனவே ரூ.1.75 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதில், தடுப்புச் சுவர், நடைபாதை டைல்ஸ் பதிக்கும் பணி ஆகியவற்றில் குறைகள் இருந்தன. எனவே, அதே மதிப்பீட்டில் இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 லட்சத்துக்கு மீண்டும் பணிகள் நடைபெறவுள்ளன. பாலத்தின் தடுப்புச் சுவர் அமைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைபடி இந்த புனரமைப்பு பணிகள் நடைபெறும். ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 15 நாள்களில் அவை இறுதி செய்யப்பட்டு காவிரிப் பாலத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆர்.கிருஷ்ணசுவாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com