மணப்பாறை நீதிமன்றத்தில் சமத்துவப் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மணப்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியும், குற்றவியல் நீதிமன்ற நடுவருமான எம். தர்மபிரபு தலைமையில் நடைபெற்ற விழாவில் நீதித் துறை நடுவர் துணைவியார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எம். கலையரசி ஆகியோர் புதுப்பானையில் பச்சரிசியிட, பொங்கல் வைக்கப்பட்டது. அதன்பின் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com