ஆம்னி வேன் மோதி அரசு மருந்தாளுனர் சாவு

துறையூர் குடில் சாலையில் வசிப்பவர் திருநாவுக்கரசு மகன் செல்வராஜ்(50). இவர் தண்டலைபுத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

துறையூர் குடில் சாலையில் வசிப்பவர் திருநாவுக்கரசு மகன் செல்வராஜ்(50). இவர் தண்டலைபுத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக உள்ளார். இவர், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் காளிப்பட்டி அருகே அவரது வாகனத்துக்கு பின்னால் வந்த ஆம்னி வேன் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலின் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆம்னி வேன் ஓட்டுநர் துறையூரைச் சேர்ந்த சுகுமாறன் மகன் கார்த்திகேயனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com