கல்லூரி மாணவரிடம் செயின் பறிப்பு

திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சியில் பொறியியல் கல்லூரி மாணவரிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 நெல்லை மாவட்டம், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்முத்து (21). இவர் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டடக்கலை பொறியியல் பிரிவு 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். 
இந்நிலையில், புதன்கிழமை மதியம் சுபாஷ்முத்து, கன்டோன்மென்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சுபாஷ்முத்துவின் கழுத்தில் கிடந்த 1 பவுன் செயினை பறித்துச் சென்றனர். 
இதுகுறித்து கன்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸில் அவர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com