சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நவசண்டி ஹோமம் நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நவசண்டி ஹோமம் நடைபெற்றது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி வழிபாட்டு தலங்களில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் கடந்த 6.2.2017 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற நட்சத்திர அடிப்படையில் ஓராண்டு பூர்த்தியடைந்ததை முன்னிட்டு கடந்த புதன், வியாழக்கிழமை இரு நாள்களும் கோயிலில் நவ சண்டி ஹோமம் நடைபெற்றது. 
 இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com