மண்ணச்சநல்லூர் கடை வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன.19) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மண்ணச்சநல்லூர் லோக்கல் பண்டு சாலையில் (எல்.எப். ரோடு) உள்ள சித்தி விநாயகர் கோயில் பிரசித்தி பெற்றது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு லட்சுமி கணபதி பூஜை, மூலிகை திரவிய ஹோமங்களுடன் 4-ஆம் காலை பூஜையும், காலை 9.50 மணிக்கு கடங்கள் புறப்பட்டு 10.21 மணிக்கு விமான கும்ப அபிஷேகமும் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து மூலவர் அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் டி.கே.எம். தனக்கோடி செட்டியார் குடும்பத்தினர், கடை வியாபாரிகள் செய்துள்ளனர்.