துறையூர் அருகே தாய், மகள் தீக்குளித்து தற்கொலை

துறையூர் அருகே எரகுடியில் தாயும், மகளும் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர்.

துறையூர் அருகே எரகுடியில் தாயும், மகளும் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர்.
எரகுடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கொத்தனார் ரவியின் மனைவி மாலதி (36). இவருடைய மகள் சிநேகா(18). துறையூர் அருகே கண்ணனூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். தான் காதலிக்கும் இளைஞரைத் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையில் தாயும், மகளும் வெள்ளிக்கிழமை அவரவர் உடல்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 
இருவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com