எலெக்ட்ரீஷியன் தூக்கிட்டுத்  தற்கொலை

திருச்சியில் எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சியில் எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). எலெக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். இவர், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு திரும்பியபோது  மணிகண்டன் தூக்கில் சடலமாக கண்டு போலீஸில் புகார் செய்தனர். இதனையடுத்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
சங்கிலிப் பறிப்பு:  திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் . ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவரது மனைவி விஜயலட்சுமி (52). இவர், செவ்வாய்க்கிழமை மாலை,  இளங்காட்டு 
மாரியம்மன் கோயில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  
அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென,  கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில்  காத்திருந்த  மற்றொரு  நபருடன்  ஏறிதப்பிச் சென்றார்.  
இது குறித்த புகாரின் பேரில்  நீதிமன்றக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com