திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காந்தி மார்க்கெட் அருகிலுள்ள அலங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. நரம்பு தளர்ச்சியால் சிகிச்சை பெற்று வந்த போதும், மது அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காந்தி மார்க்கெட் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.