திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தில் நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் மையப்பகுதியில் எளமணம் சாலையில் சுமார் இரண்டரை சென்ட் நிலம் பலநாள்களாக குப்பைகளை கொட்டிவந்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், கொசு தொல்லை அதிகமாக இருந்தது.
இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் இயந்திரம் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.