திருச்சி
பொறியியல் மாணவியிடம் நகை பறிப்பு
திருச்சி கே.கே.நகர் பகுதியில் பொறியியல் மாணவியிடம் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் பொறியியல் மாணவியிடம் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜகதீஷ் மகள் சுவேதா (20). அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் இவர், வீட்டுக்கு அருகிலுள்ள தட்டச்சு பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். திங்கள்கிழமை மாலை பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், சுவேதா கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் சங்கிலி, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் சுவேதா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.