திருச்சி மாவட்டம், மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7,82,083 இருந்தது.
மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் வகையறா திருக்கோயில்களுக்கு உள்பட்ட ஸ்ரீ நல்லாண்டவர் கோயிலில் நிரந்தர உண்டியல் காணிக்கைகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் நிரந்தர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.ராணி, செயல் அலுவலர் வே.பிரபாகர், ஆய்வாளர் விஜயகுமார், பரம்பரை அறங்காவலர் கே.ஆர்.கே.முத்துவீர லெக்கைய நாயக்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ரூ.7,82,083 ரொக்கம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் 35 பணத் தாள், 26 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்திருந்தது.