சாலை விபத்தில்  இளைஞர் சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே  வியாழக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே  வியாழக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
திருவையாறு விஷ்ணம்பட்டியைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஆரோக்கிய சுரேஷ் (28), அதே ஊரைச் சேர்ந்தவரும், அவரது நண்பருமான சரவணன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சேத்துப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆரோக்கிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன், காயத்துடன் அப்பகுதியில் மதுபோதையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. 
இதையடுத்து, ஆரோக்கியசுரேஷின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த துவரங்குறிச்சி போலீஸார் விபத்து குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com