திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பாரதியார்நகர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் சிசு சடலம் மீட்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த பாரதியார்நகர் வலம்புரி விநாயகர் ஆலயம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நாய் ஒன்று, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் சிசுவை வாயில் கவ்விக் கொண்டு வந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் நாயை விரட்டி சடலத்தை மீட்டனர். தகவலின்பேரில் வந்த மணப்பாறை போலீஸார் சிசு உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.