லால்குடி அருகே வீடு புகுந்து தாக்கி 15 பவுன் கொள்ளை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கணவரை தாக்கி, மனைவி அணிந்திருந்த 15 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை கணவரை தாக்கி, மனைவி அணிந்திருந்த 15 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.
லால்குடி அருகேயுள்ள கல்லக்குடி பேரூராட்சியில் உள்ளது பழனியாண்டி நகரில் வசிப்பவர் ஜெய்சங்கர், டால்மியா சிமெண்ட் ஆலை ஊழியர். இவரது மனைவி சாந்தி (48) ஆகியோர் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து  வீடு புகுந்த நபர்கள் ஜெய்சங்கரை தாக்கியதில் அவர் மயங்கினார். அவரது மனைவி சாந்தி அணிந்திருந்த 12 பவுன் தாலிச் செயின் மற்றும் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸார் விசாரணை நடத்தினர்.   மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹியாவுல் ஹக், தடவியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com