வாலிபால் :  பாரதிதாசன் தொழில்நுட்ப  பொறியியல் கல்லூரி சாம்பியன்

திருச்சியில் நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகள் பிரிவில் வாலிபால்

திருச்சியில் நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகள் பிரிவில் வாலிபால் போட்டியில் அண்ணா பல்கலைக்கழகப் பாரதிதாசன் தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரி  சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் கழகம் சார்பில் 13 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகள்பிரிவு வாலிபால் போட்டி திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.  6 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது.
இறுதிப்போட்டியில்  திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியை  25-19, 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் அண்ணா பல்கலைக்கழகப் பாரதிதாசன் தொழில்நுட்பப் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன் மூலம் மண்டலங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இக்கல்லூரி பெற்றது.களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியை 25-23, 25-18 என்ற புள்ளிகள்கணக்கில் ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி வென்று மூன்றாமிடத்தைப் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com