மணப்பாறையில் சபரிமலை புனிதம் காப்போம் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
மணப்பாறையில் பாஜக, இந்து முன்னணி சார்பில் நடைபெற்றசபரிமலை புனிதம் காப்போம் ஊர்வலத்துக்கு பாஜக பொய்கைப்பட்டி ஊராட்சித் தலைவர் நல்லுச்சாமி தலைமை வகித்தார்.
ஒன்றியத் தலைவர் சுப்பிரமணி, மாவட்டப் பொருளாதாரப் பிரிவு துணைத்தலைவர் கோபால், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் குழந்தைவேல், பேச்சாளர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள முனியப்பன் சுவாமி கோயிலை அடைந்தது.